ஆப்நகரம்

ரஜினியின் இன்றைய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

ஜனவரியில் புதிய கட்சி ஆரம்பிப்பதாக ரஜினி அறிவித்துள்ளதை திருச்சியில் அவரது ரசிகர்கள் வெடிவைத்து கொண்டாடினர்.

Samayam Tamil 3 Dec 2020, 9:20 pm
நடிகர் ரஜினிகாந்த் 2021 ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று இன்று அதிரடியாக அறிிவித்துள்ளார். நீண்ட காலமாக இதனை எதிர்பார்த்து காத்திருந்த அவரது தொண்டர்கள் இன்று தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி வௌளத்தில் திளைத்துள்ளனர்.
Samayam Tamil ரஜினி ரசிகர்கள் திருச்சி
திருச்சி -ரஜினி ரசிகர்கள்


இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் கலீல் தலைமையில் வழிவிடு முருகன் கோயில் முன்பு திரண்ட ரஜினி தொண்டர்கள் சூரத்தேங்காய் உடைத்தும் , வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட செயலாளர் கலீல் பேசும்போது, "தலைவர் தனது உயிரை பணயம் வைத்து அரசியலுக்கு வந்திருக்கிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் ரஜினியே நிற்பதாக நினைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

மழையில் குளிர்ந்த மலைக்கோட்டை மாநகர்!

இந்தக் கொண்டாட்டத்தில் இணை செயலாளர்கள் கர்ணன், எஸ்பி. ராஜ் துணை செயலாளர்கள் ஆர்.பாலன் சுதர்ஷன், ராயல் ராஜு, மலைக்கோயில் நாசர், எம்எஸ் சந்திரசேகர், மன்னன் இளங்கோ, பாலக்கரை சக்திவேல் சபையர் முத்து, விமல்ஜித் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், விவசாய வழக்கறிஞர், தகவல் தொழில்நுட்ப அணியினர் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி