ஆப்நகரம்

75ஆவது சுதந்திர தினம்: ஸ்ரீரங்கம் மாணவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேடத்தில் பேரணி!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஶ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 75 பேர் சுதந்திர போராட்ட வீரர்கள் போன்று வேடமிட்டு பேரணியாக சென்றனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 13 Aug 2022, 12:48 pm

ஹைலைட்ஸ்:

  • நாட்டின் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா
  • வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட விழிப்புணர்வு
  • ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பேரணி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சுதந்திர போராட்ட வீரர்கள் போன்று வேடமிட்டு பேரணி
சுதந்திர போராட்ட வீரர்கள் போன்று வேடமிட்டு பேரணி
நாட்டின் 75 ஆவ்து சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை ஒட்டி இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுமக்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இபிஎஸ் முதல்வர் ஆனால் தான் தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும்- தருமபுரியில் கே.பி.அன்பழகன் பேச்சு!
இதே போல 75 ஆவது சுதந்திர தினதையொட்டி திருச்சி ஶ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை சார்ந்த 75 மாணவ மாணவிகள் காந்தி, நேரு, அம்பேத்கர் , வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், ஜான்சி ராணி , பாரதியார் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் போன்று வேடமிட்டு ஶ்ரீரங்கம் ராஜா கோபுரத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பள்ளியை வந்தடைந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லில்லிப்ளோரா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அந்தநல்லுர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் , ஶ்ரீரங்கம் 2 ஆவது வார்டு உறுப்பினர் ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி