ஆப்நகரம்

வரலாற்றில் முதல்முறையாக ஸ்ரீரங்கத்தில் இருந்து மந்திராலயத்திற்கு செல்லும் வஸ்திர மரியாதை!

வரலாற்றில் முதல் முறையாக ஆந்திராவில் உள்ள மந்திராலயத்திற்கு வஸ்திர மரியாதை அனுப்பப்பட்டது.

Samayam Tamil 10 Aug 2022, 10:30 pm
பாரத நாட்டில் மாநிலங்களுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உறவு மேம்பட, 2022 - 2023ம் ஆண்டு தமிழக அரசின் சட்டமன்ற அறிவிப்பின்படி, பல்வேறு மாநிலங்களில் உள்ள திருக்கோயில்களுக்கும், தமிழக திருக்கோயில்களிலிருந்து வஸ்திர மரியாதை வழங்கிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil trichy srirangam temple


தற்சமயம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி திருக்கோயிலுக்கு, ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வஸ்திர மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் வஸ்திர மரியாதை மற்றும் பகுமானம் எனப்படும் சீர்வரிசைப் பொருட்கள், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் மூலப் பிருந்தாவனத்திற்கு வரும் 12-ம் தேதி வழங்க, மடத்தில் இருந்து கோரிக்கை பெறப்பட்டது.

மேற்படி மடத்தின் வேண்டுகோளை ஏற்று, மேற்படி வஸ்திர மரியாதை வழங்குவது குறித்து கோயிலின் தலைமை அர்ச்சகரின் கருத்துரு கேட்கப்பட்டு தக்கார் தீர்மானம் இயற்றப்பட்டது. இதையடுத்து, கோயில் நிர்வாகத்தினர் ஸ்ரீராவேந்திர மூல பிருந்தாவனத்திற்காக வஸ்திரம் மற்றும் பகுமானம் எனப்படும் சீர்வரிசைப் பொருட்கள், இன்று கோயிலிருந்து முறைப்படி எடுத்துச் செல்லப்பட்டன.

12-ஆம் தேதியன்று வஸ்திரம் மற்றும் சீர்வரிசைப் பொருட்கள், மந்திராலயம் ராகவேந்திரர் மூல பிருந்தாவனத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படவுள்ளது.

அடுத்த செய்தி