ஆப்நகரம்

Silambam: நேபாளத்தில் சிலம்பப்போட்டி... சம்பியன்ஷிப் வென்ற தமிழக அணி

நேபாளத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பங்கு பெற்று தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Samayam Tamil 26 Feb 2021, 7:47 pm
நேபாளத்தில் கடந்த வாரம் நடந்த இன்டர்நேஷனல் சிலம்பம் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட வீரர்-வீராங்கனைகள் 65 பேர் கலந்து கொண்டனர். இதில் யூத் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா சார்பில் திருச்சியில் இருந்து சிலம்ப பயிற்சியாளர் வேல்முருகன் தலைமையில் வீரர்-வீராங்கனைகள் 10-பேர்சென்றனர்.
Samayam Tamil nepal winners


குறிப்பாக தமிழகத்திலிருந்து 50-ற்கும் மேற்பட்ட சிலம்ப வீர வீராங்கனைகள் பங்கேற்றனர். நேபாளத்தில் நடந்த சிலம்பப் போட்டியில் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான சிலம்பம் போட்டியில் தங்கபதக்கமும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சிலம்பம் போட்டியில் தங்கபதக்கமும், சீனியர்களுக்கான சிலம்பம் போட்டியில் தங்கபதக்கம் என அதிகப்படியான தங்கப்பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினார்கள்.

சிங்கப்பூரில் வசமாக சிக்கிய இந்திய பெண்.. ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி!

தங்கப்பதக்கம் பெற்ற திருச்சியை சேர்ந்த சிலம்ப வீரர்-வீராங்கனைகள் ரயில் மூலம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு இன்று வந்தனர். அவர்களை உறவினர்கள் மற்றும் மூத்த சிலம்ப வீரர்கள் மேளதாளத்துடன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அடுத்த செய்தி