ஆப்நகரம்

நெகிழ வைத்த விஜய் ரசிகர்கள்; திருச்சி முதியோர் இல்லத்தில் சிறப்பு ஏற்பாடு!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்த நாளை ஒட்டி, திருச்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 3 Jul 2022, 7:26 am
தமிழ் திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று (ஜூலை 2) தனது 81வது பிறந்த நாளைக் கொண்டாடினர். இதையொட்டி விஜய் ரசிகர்கள், திரைத்துறையினர் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். பிறந்த நாளை ஒட்டி தனது மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Samayam Tamil SAC Birthday


இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. தந்தைக்கும், மகனுக்கும் இடையில் பிரச்சினை நிலவி வருவதாக கூறப்படும் நிலையில் வாழ்த்து ஏதும் நடிகர் விஜய் சொன்னாரா? என்ற கேள்வியை சிலர் சமூக வலைதளங்களில் முன்வைத்தனர். இந்நிலையில் திருச்சியில் உள்ள விஜய் ரசிகர்கள் நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றை செய்துள்ளனர்.

அதாவது, திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள முதியோர் அமைதி இல்லத்தில் காலை உணவு வழங்கினர். இதற்கான ஏற்பாடுகள் முன்னாள் மாவட்ட திருச்சி விஜய் மக்கள் இயக்கத் தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மும்பை பவுல், புத்தூர் பிரகாஷ், உறையூர் சரண்ராஜ், காஜா மலை சுப்ரமணி,

ஒட்டுமொத்த அதிமுகவின் எதிர்பார்ப்பு இதுதான்; திருச்சி ர.ர.,க்கள் பரபரப்பு!

மலைக்கோட்டை நசீர், தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், புத்தூர் பாபு, பாச்சூர் ஆனந்த், மண்ணச்சநல்லூர் கலைவாணன், சந்தோஷ் குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர், நடிகர் என பன்முகங்கள் கொண்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இயக்கத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சிலே துணிவிருந்தால்,

சாட்சி, வெற்றி, நான் சிகப்பு மனிதன், நாளைய தீர்ப்பு, ரசிகன், தேவா, நெஞ்சினிலே, ப்ரியமுடன் உள்ளிட்ட பல படங்கள் வெற்றி பெற்றன. கடைசியாக 2018ஆம் ஆண்டு வெளிவந்த டிராபிக் ராமசாமி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி