ஆப்நகரம்

திருநங்கையர் தினம்: காவல் உதவி ஆணையர் அலுவலக வளாகத்தில் மரம் நட்டு மகிழ்ச்சி!

திருநங்கையர் தினத்தை முன்னிட்டு காவல் உதவி ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் உழைக்கும் திருநங்கைகள் மரம் நட்டு கொண்டாடினர்.

Samayam Tamil 15 Apr 2022, 4:39 pm
தமிழகத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி திருநங்கைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்திலும் அழகு நிலையம், தையல் கடை, கேட்டரிங் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்யும் திருநங்கைகள் திருச்சி காவல் உதவி ஆணையர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.
Samayam Tamil WhatsApp Image 2022-04-15 at 4.38.02 PM.


இந்த நிகழ்ச்சியில் கண்டோன்மெண்ட் காவல் நிலைய உதவி ஆணையர் அஜய் தங்கம் மற்றும் காவல்துறையினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு திருநங்கைகள் இணைந்து அவர்களும் மரக்கன்று நட்டு மகிழ்ந்தனர்.

எத்தனையோ திருநங்கைகள் தவறான பாதைகளில் சென்று பல குற்றங்களில் ஈடுபடும் நிலையில் இன்று அன்றாட வாழ்விற்காக உழைத்து பாடுபடும் திருநங்கைகளை பாராட்டி காவல்துறையினர் சால்வை அணிவித்தனர்.

மேலும் இவர்களைப் போன்று உழைக்கும் திருநங்கைகள், உலக திருநங்கைகள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என காவல் நிலைய உதவி ஆணையர் என பேசினார்.

திருநங்கையர் தினத்தை முன்னிட்டு திருச்சி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகள் மரக்கன்று நட்டு கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி