ஆப்நகரம்

51 பயணிகளுடன் திருச்சியில் இறங்கிய விமானம்: தூத்துக்குடி கனமழை எதிரொலி!

சென்னை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பிற்பகல் புறப்பட்ட விமானம் மோசமான வானிலை காரணமாக தனது இலக்கை அடைய முடியாமல் பாதி வழியிலே திருச்சியில் தரை இறங்கியது.

Samayam Tamil 26 Nov 2021, 3:51 pm
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக பிற்பகல் 12. 20 இண்டிகோ விமானம் சென்று வருகிறது. அப்படி குறிப்பிட்ட விமானம் நேற்று புறப்பட்டது. காலதமாக பிற்பகல் 12. 50க்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட 51 பயணிகளுடன் புறப்பட்டது.
Samayam Tamil 51 பயணிகளுடன் திருச்சியில் இறங்கிய விமானம்: தூத்துக்குடி கனமழை எதிரொலி!


வான்வெளியில் பறந்த விமானம் தூத்துக்குடி பகுதியில் கன மழை காரணமாகவும், வானிலை மோசமாக இருந்ததன் காரணமாகவும் தரையிறக்க முடியாது என விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் வானில் வட்டமிட்டப்படி 3 மணி நேர இடைவெளிக்குபின் திருச்சியை நோக்கி பறந்தது.

தூத்துக்குடியில் தரையிறங்க வேண்டிய இண்டிகோ சிறிய ரக விமானம் திருச்சியில் மதியம் 3. 30 மணிக்கு தரையிறக்கப்பட்டது.

காவிரி வழியாக வெளியேற்றும் நீர் குறைந்தது: திருச்சி முக்கொம்பு இன்றைய நிலவரம்!
பயணிகள் விமானத்திற்க்குளே அமர வைக்கபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்க்கு பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் வானிலை சரியான உடன் விமானிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின்பு திருச்சியிலிருந்து மீண்டும் மாலை 4. 30 புறப்பட்ட விமானம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு 5. 05 மணிக்கு 51 பயணிகளுடன் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பேசுப் பொருளாக மாறியுள்ளது.

அடுத்த செய்தி