ஆப்நகரம்

திருச்சியில் 'ஹைடெக்' விபச்சாரம்... சிக்கியது எப்படி?

திருச்சி கருமண்டபம் பகுதியில் மசாஜ் சென்டர் பெயரில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த இருவரை கைது செய்த போலீசார் இரு பெண்களை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 May 2022, 9:22 pm
திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடந்து வருவதாக செஷன்ஸ் கோர்ட் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Samayam Tamil Trichy massage centre prostitution
கோப்புப்படம்


தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மசாஜ் செய்வதாக கூறி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அந்த பெண்களை மதுரை சேர்ந்த அருண்பாண்டியன்(வயது 25), பால்பாண்டி(வயது 44) ஆகிய புரோக்கர்கள் விவசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் இருவரிடம் இருந்து 3 செல்போன்கள், பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட இரு இளம்பெண்களை அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அரசியலில் யாரும் யோக்கியன் இல்லை... அமைச்சர் கே.என்.நேரு பேச்சால் பரபரப்பு!

திருச்சியில் விபச்சாரத் தொழில் அதிகரித்து வருவதாக மக்கள் புகார் கூறி வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் அதனை உறுதிப்படுத்துவது போல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த 3-ம் தேதி திருச்சி ஈபி(EB) சாலையில் உள்ள வீடு ஒன்றில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்த இருவரை கைது செய்த போலீசார் அங்கிருந்து 4 இளம்பெண்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி