ஆப்நகரம்

தெருவுல விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமானது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 12 Nov 2020, 5:04 pm
நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்தவர் தேவேந்திரன், புவனேஸ்வரி தம்பதியின் மகன் ஹாரீசன் (2). உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தேவேந்திரன் தமது குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் கல்லாத்துக்கோம்பை கிராமத்துக்கு கடந்த வாரம் வந்தார்.
Samayam Tamil சிறுவன் மாயம்
திருச்சியில் இரண்டு வயது சிறுவன் மாயம்


சடங்கில் பங்கேற்றுவிட்டு மனைவி, மகனை உறவினரான செல்லையா வீட்டில் தங்க வைத்துவிட்டு குன்னூருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை ஹாரீசன் கல்லாத்து கோம்பையில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். தமது மகனுக்கு மதியம் சாப்பாடு ஊட்டுவதற்காக அவனை அழைத்து வர புவனேஸ்வரி சென்றுள்ளார்.

அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தமது மகனை காணாமல் போனதை அறிந்து புவனேஸ்வரி அதிர்ச்சியடைந்தார். உறவினர்கள் வீடுகளில் தேடியும் ஹாரிசன் கிடைக்காததால், தமது மகன் காணாமல் போனது குறித்து உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் புவனேஸ்வரி புகார் செய்தார்.

ஆட்டு ரோமங்களுடன் பரிமாறப்பட்ட மட்டன் பிரியாணி... கலெக்டர் வரை சென்ற பாமக பிரமுகர்!

அந்த புகாரின் அடிப்படையில், காணாமல் போன இரண்டு வயது சிறுவனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி