ஆப்நகரம்

திருச்சியில் ஒரே நாளில் மற்றொரு அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுப்பு - கொலையா? தற்கொலையா? என விசாரணை

துறையூர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 5 May 2023, 8:53 pm

ஹைலைட்ஸ்:

  • துறையூர் பகுதி அருகே ஆண் நபரின் சடலம் மீட்பு
  • சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை
  • ஒரே பகுதியில் வெவ்வேறு இடங்களில் ஆண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Trichy man dead body rescue
திருச்சி மாவட்டம்; திருச்சி அருகே முசிறியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் பொன்னுச்சங்கம்பட்டி என்ற பகுதி அருகே வாய்க்கால் பாலத்திற்கு அடியில் அடையாளம் தெரியாத ஆண் நபரின் சடலம் கிடந்துள்ளது. அப்பகுதியாக சென்ற பொதுமக்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஜம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்தனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சம்பவ இடத்திற்கு முசிறி காவல் கண்காணிப்பாளர் யாஸ்மின் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முகம் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் படுகொலை - திருச்சியில் ஆற்றுப்பாலத்தில் உடல் வீச்சு

பின்னர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த ஆண் நபரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபரை யாராவது கொலை செய்து அங்கு வீசி சென்றார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதே துறையூர் பகுதியில் அருகே இன்று மற்றொரு அடையாளம் தெரியாத ஆண் நபரின் சடலம் முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது.

"விழுப்புரம் எம்பிக்கு புதுச்சேரியில் என்ன வேலை.?" - சரமாரி கேள்வி எழுப்பிய துணைநிலை ஆளுநர் தமிழிசை

ஒரே நாளில் இரண்டு ஆண் சடலங்கள் ஆற்றில் ஓரம் பாலங்களுக்கு அடியில் வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி