ஆப்நகரம்

திருச்சி ரயில் நிலைய பிளாட்ஃபார்மில் தூக்கில் பிணமாக தொங்கிய நபர்... பெரும் அதிர்ச்சி!

திருச்சி அருகே ரயில் நிலைய பிளாட்ஃபார்மில் அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 19 Oct 2021, 6:25 pm
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள ரயில் நிலைய பிளாட்பார்மில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil ரயில்வே ஸ்டேஷன் பிளாட்ஃபார்மில் தூக்கில் தொங்கிய நபர்: திருச்சியில் பெரும் அதிர்ச்சி!


இதை பார்த்த ரயில்வே ஊழியர்கள் திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் ரயில்வே காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர் உடலை கைப்பற்றி
பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து கூத்தைப்பார் கிராம நிர்வாக அலுவலர் ராதிகாவிடம் புகார் பெற்று வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.


தற்கொலை செய்துகொண்ட அடையாளம் தெரியாத அந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார், ஏன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என எந்த தகவலும் இதுவரை அறியப்படாத நிலையில் ரயில்வே காவல் துறையினர் விசாரணையை தொடக்கி உள்ளனர்.

இறந்து போன வாலிபர் வெள்ளை கலர் முழுகை சட்டையும், ஊதா மற்றும் அரக்கு நிறம் கலந்த முக்கா பேண்டும் அணிந்து உள்ளார் என்ற செய்தியை வைத்து முதற்கட்ட விசாரணையை ரயில்வே காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் சாவகாசமாக ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளும் நேரத்தில் யாருமே இல்லாமல் இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நபர் குறித்து மாவட்டத்தில் யாருக்காவது தகவல் தெரிந்தால் அதை உடனடியாக காவல் துறையினரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி