ஆப்நகரம்

வைகுண்ட ஏகாதசி...ரங்கநாதரின் ஐந்தாம் நாள் அசத்தல் கெட்டப்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழாவில் பகல்பத்து நிகழ்ச்சியின் ஐந்தாம் நாளான இன்று கவிரிமான் தொப்பாரை கொண்டை , விமான பதக்கம், இரத்தின அபயஹஸ்தம் , இரத்தினலிங்க தோளா, முச்துச்சரம் , பவளமாலை ,காசு மாலை அலங்காரத்தில் எம்பெருமான் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Samayam Tamil 19 Dec 2020, 9:55 am
108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
Samayam Tamil திருச்சி ஸ்ரீரங்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் -வைகுண்ட ஏகாதசி திருவிழா


திருவிழாவில் பகல் பத்து வைபவத்தின் ஐந்தாம் நாளான இன்று நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து கவிரிமான் தொப்பாரை கொண்டை , விமான பதக்கம், இரத்தின அபயஹஸ்தம் , இரத்தினலிங்க தோளா, முச்துச்சரம் , பவளமாலை ,காசு மாலை அலங்காரத்தில் புறப்பட்டு 7.00 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார்.

பின்னர் அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ரெங்கா ரெங்கா' என பக்தி கோஷமிட்டனர். இதனையடுத்து இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

அடுத்த செய்தி