ஆப்நகரம்

மாஸ்டர் படத்தால் திருச்சியில் பெரும் சோகம்: அச்சத்தில் மக்கள்!

கொரானா தக்கம் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து திரையரங்கில் மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Jan 2021, 6:24 pm
ஆனால், திரைப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முகம் கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட விதிகளை விஜய் ரசிகர்கள் பின்பற்றவில்லை. இதனால் பெரும் அச்சம் எழுந்துள்ளது.
Samayam Tamil மாஸ்டர் படத்தால் திருச்சியில் பெரும் சோகம்: அச்சத்தில் மக்கள்!
மாஸ்டர் படத்தால் திருச்சியில் பெரும் சோகம்: அச்சத்தில் மக்கள்!


இந்தியாவில் கொரானா தாக்கத்தை அடுத்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் 24ஆம் தேதி பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திரையரங்குகள் பொழுதுபோக்கு இடங்கள், பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

அதன்பின் கொரானா பாதிப்பு குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடலாம் எனத் தமிழக அரசு அறிவித்தது. மேலும் அந்த அறிவிப்பில் 50சதவீத பார்வையாளர் மட்டுமே அனுமதிக்க முடியும் என அரசு விளக்கம் அளித்திருந்தது.

பொங்கல் ஷாப்பிங் பரபரப்பில் இப்படி ஒரு அதிர்ச்சி!

இதனை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது. படத்தைக் காண விஜய் ரசிகர்கள் குவிந்தனர்.

திரை அரங்குகளில் முக கவசம் அணிய வேண்டும் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசு அறிவித்திருந்தாலும் ரசிகர்கள் அதைப் பின்பற்றவில்லை. முக கவசம் அணியவில்லை, தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கொரோனா தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி