ஆப்நகரம்

வட்டாட்சியர் தந்தை அடித்து கொலை; நேர்மைக்கு கிடைத்த பரிசு?

பணியில் நேர்மையை கடைபிடித்த வட்டாட்சியரின் தந்தை சரமாரியாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 12 Jan 2022, 5:36 pm
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார்.
Samayam Tamil போலீஸ் ஆய்வு நடக்கிறது
போலீஸ் ஆய்வு நடக்கிறது



இவரது தந்தை சுப்பையா (60) வழக்கம்போல் நாகமநாயக்கன் பட்டியில் உள்ள தனது தோட்டத்திற்கு நேற்று மாலை சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பவில்லை.

அதனால் சுப்பையா தோட்டத்திலேயே தங்கி விட்டதாக வீட்டில் உள்ளவர்கள் நினைத்து தேடாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அவரது தோட்டத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டருக்கு தொலைவிலுள்ள வீரம்மச்சாம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உடலில் காயங்களுடன் சுப்பையா மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கரிகாலன் என்பவர் ஊராட்சி மன்றத்தலைவர் கணேசனுக்கு தகவல் அளித்தார் .

ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை; உடனடியாக வழங்க வந்தது கோரிக்கை!

இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜம்பு நாதபுரம் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் அருள்மணி மற்றும் துறையூர் வட்டாட்சியர் ரமேஷ் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

யாருன்னு சொன்ன புதிய டிஐஜி; திகைத்துபோன போலீஸ்!

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். துணை வட்டாட்சியரான கோவிந்தராஜ் பணியில் நேர்மையை கடைபிடிப்பவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அவருடைய தந்தை கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி