ஆப்நகரம்

திருச்சி வந்த பெண்ணுக்கு கொரோனா: ஏர் போர்ட்டில் பெரும் பரபரப்பு!

பெண் பயணிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதன் காரணாமாக சர்வதேச விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 7 Feb 2021, 7:40 pm
சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை 7. 30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதிலிருந்து வெளியே வந்த பயணிகளுக்கு உடல் வெப்ப அளவு கண்டறியும் கருவி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Samayam Tamil திருச்சி வந்த பெண்ணுக்கு கொரோனா: ஏர் போர்ட்டில் பெரும் பரபரப்பு!


அப்போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவருக்குக் காய்ச்சல் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக அந்தப் பெண் பயணியை மருத்துவ குழுவினர் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் கொரோனா அறிகுறியுடன் இருந்த இந்தப் பெண் பயணியுடன் விமானத்தில் பயணம் செய்த பிற பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பைலட் ஆகியோருக்கு விமான நிலையத்தில் கொரோனா அறிகுறிகள் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்: தற்கொலை என வழக்குப் பதிவு!

விமானத்தில் பயணம் செய்த பெண் பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவகாரம் விமான நிலையத்தைப் பதற்றத்தில் ஆழ்த்தியது.

அடுத்த செய்தி