ஆப்நகரம்

காதலித்து பெண் திருமணம் செய்ய சொன்னவுடன் கழற்றி விட்ட திருச்சி விஏஓ!

திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டு ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர் மீது பெண் காவல் துறையில் புகார்.

Samayam Tamil 1 Aug 2021, 2:25 pm
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமணம் செய்வதாக பழகிவிட்டு, பின் திருமணம் செய்யமால் ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
Samayam Tamil காதலித்து பெண் திருமணம் செய்ய சொன்னவுடன் கழற்றி விட்ட திருச்சி விஏஓ!


லால்குடி அருகே நஞ்சை சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் மகள் கலைவாணி(25). இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பயின்றுள்ளார். இவர் குல தெய்வம் கோயிலுக்கு சென்ற போது, அதே பகுதியில் உள்ள நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மணிகண்டன் (32) நண்பராக அறிமுகமாகி உள்ளார்.

நண்பராக அறிமுகமான மணிகண்டன் கலைவாணிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து போனில் இருவரும் பேசி காதலை வளர்த்துள்ளனர். இருவரும் காதலித்த காலத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊர் சுற்றி வந்துள்ளனர். இதற்கிடையே வேலையில்லாமலிருந்த மணிகண்டன் தற்போது கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்துள்ளார்.

இளைஞர் மீது பாய்ந்த சிறுத்தை.... பீதியில் திருச்சி மக்கள்!
இந்த சூழலில் கலைவாணி லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னை காதலித்து வந்த மணிகண்டன் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றி வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார். கலைவாணி கொடுத்த புகாரின் பேரில், மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி