ஆப்நகரம்

காவிரி ஆற்று புதை மணலில் சிக்கி சடலமான வாலிபர்... சிறுவர்கள் மாயம்

காவிரி ஆற்றில் குளித்தபோது பலியான இருவரை சடலமாக மீட்டுள்ள மீட்பு படையினர், மாயமான இரு சிறுவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Samayam Tamil 17 Nov 2020, 11:40 pm
திருச்சி மாவட்டம், முசிறி அந்தரபட்டி பகுதியில் வசிப்பவர் ஜெயலட்சுமி. இவரது உறவினர்கள் கோவை மற்றும் கரூர் பகுதியில் இருந்து ஜெயலக்ஷ்மி இல்லத்திற்கு நேற்று வந்துள்ளனர்.
Samayam Tamil காவிரி ஆறு - முசிறி
காவிரி ஆறு -திருச்சி முசிறி


ஜெயலட்சுமியின் உறவினர்களான கோவை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார் (31), நிதீஷ்குமார் (15), சிறுவர்கள் மிதுனோஷ்(8) , ரதீஷ் (12) ஆகியோர் முசிறி பரிசல் துறை ரோட்டில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக புதை மணலில் சிக்கிய பேராசிரியர் சரவணகுமார் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். சிறுவர்கள் ரதீஷ், மிதுனோஷ் ஆகியோரும் மாயமாகினர்.

கொள்ளை போன நகைகள்... அளவை குறைத்து அதிகாரி போலீசில் புகார்?

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் காவிரி ஆற்று தண்ணீரில் இறங்கி சிறுவர்களை தேடினர்.

அப்போது சரவணகுமார் உடல் சடலமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து மிதுனோஷ், ரதீஷ் ஆகியோரை தேடியபோது எதிர்பாராதவிதமாக முசிறி கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (12) என்ற சிறுவனின் சடலம் கிடைத்தது.

ஒருபுறம் மழை... மறுபுறம் மேலணை கட்டுமானப் பணி... ஆட்சியர் ஆய்வு

தேடிய சிறுவர்களில் சடலம் கிடைக்காமல் மேலும் ஒரு சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.

மாயமான சிறுவர்கள் இருவரையும் மீட்புப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். முசிறியில் தற்போது விட்டுவிட்டு மழை பெய்வதால் மழையிலும் வீரர்கள் சிரமத்தை பொருட்படுத்தாமல் சிறுவர்களை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி