திருச்சி உறையூர் மிண்ணப்பன் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் சுகன்யா, சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரும், லால்குடி வெள்ளானூர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் மணிகண்டன் என்பவரும் இன்று மாலை உறையூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.
அங்கு இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகமாகி சமையலறையில் இருந்த கத்தியால் சுகன்யாவின் கழுத்துப் மற்றும் தோள்பட்டை பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களில் சத்தியமூர்த்தி குத்தியுள்ளார்.
வெல்லமண்டி நடராஜன் vs கே.என்.நேரு... தேர்தலுக்குத் தயாராகும் திருச்சி
வலியால் துடிதுடித்த சுகன்யாவின் அளறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அங்கிருந்து ஓடிய மணிகண்டன், தனது காதில் விஷமருந்து ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சாலையில் சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதேபோல் வீட்டில் உயிருக்கு போராடிய கல்லூரி மாணவியை, அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மதுரையில் ரத யாத்திரை... கோர்ட் கிரீன் சிக்னல்!
இதுகுறித்து தகவலறிந்த உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவருக்கும் காதலில் பிரச்சினையா அல்லது ஒருதலை காதலால் இந்த கொலை முயற்சி நடந்துள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கு இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகமாகி சமையலறையில் இருந்த கத்தியால் சுகன்யாவின் கழுத்துப் மற்றும் தோள்பட்டை பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களில் சத்தியமூர்த்தி குத்தியுள்ளார்.
வெல்லமண்டி நடராஜன் vs கே.என்.நேரு... தேர்தலுக்குத் தயாராகும் திருச்சி
வலியால் துடிதுடித்த சுகன்யாவின் அளறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அங்கிருந்து ஓடிய மணிகண்டன், தனது காதில் விஷமருந்து ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சாலையில் சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதேபோல் வீட்டில் உயிருக்கு போராடிய கல்லூரி மாணவியை, அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மதுரையில் ரத யாத்திரை... கோர்ட் கிரீன் சிக்னல்!
இதுகுறித்து தகவலறிந்த உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவருக்கும் காதலில் பிரச்சினையா அல்லது ஒருதலை காதலால் இந்த கொலை முயற்சி நடந்துள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.