ஆப்நகரம்

வனத்துக்குள் கிடந்த சிப்பிகள்... கழிவுக்கூடமா காடுகள்?

சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டதில் 20 டன் கடல் சிப்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Samayam Tamil 16 Dec 2020, 12:53 pm
தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டத்தில் புளியரை வனத்துறை சோதனைச் சாவடியில் 20 டன் கடல் சிப்பிகள் சிக்கியுள்ளன. 2 பேரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil வனச்சரகம்


தமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அண்டை மாநிலமான கேரளவிற்க்கு பால், அரிசி, காய்கறி வகைகள், கட்டுமான பொருட்கள் என அத்தியாவசியமான பொருட்கள் லாரிகள் முலம் கொண்டு செல்வது வழக்கம்.மேலும் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் அங்கிருந்து வரும் போது கழிவு பொருட்களை முறைகேடாக ஏற்றி வந்து தமிழக எல்லையில் கொட்டி வந்தனர்

இதனை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் சோதனை சாவடிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று கேரள மாநிலம் ஆழப்புழாவில் பல லட்சம் மதிப்புள்ள 20 டன் கடற்சிப்பிகள் லாரி மூலம் ஏற்றி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் புளியரை வனத்துறை சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

என் தலைமையில்தான் மூன்றாவது அணி அமையும்: கமல்ஹாசன் பேட்டி

அப்போது கேரளப் பதிவெண் கொண்ட லாரியை மடக்கி சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டதில் 20 டன் கடல் சிப்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து லாரி ஓட்டுனர் அஜித் என்பவரிடமும், அவருடன் வந்த வினில் என்பவரிடமும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல லட்சம் மதிப்புள்ள கடற்சிப்பி பறிமுதல் செய்த சம்பவத்தை தொடர்ந்து சோதனை சாவடியில் வாகன சோதனையை தீவிரபடுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி