ஆப்நகரம்

சாமி சிலையில் சூரியன் விழும் அற்புதக்காட்சி: மணிமூர்திஸ்வரத்தில் சிறப்பு வழிபாடு!

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில் மூலவர் விக்கிரகம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

Samayam Tamil 14 Apr 2021, 10:23 am
நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி நதிக்கரையில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் விநாயகருக்கு ஆசியாவிலேயே தனி சன்னதி கொண்டு அமைந்திருக்கக் கூடிய கோயிலாக திகழ்கிறது.
Samayam Tamil சாமி சிலையில் சூரியன் விழும் அற்புதக்காட்சி: மணிமூர்திஸ்வரத்தில் சிறப்பு வழிபாடு!


விநாயக கடவுளின் மடியில் நீலவேணி அம்பாள் அமர்ந்திருப்பது போன்று மூலவர் காட்சி தருகிறார். பழமையான திருக்கோயில்களில் கட்டிடக்கலை எடுத்துக்காட்டாக ஆண்டுதோறும் சித்திரை முதல் மூன்று நாட்கள் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடைபெற்றது.

அதன்படி பல வருடத் துவக்கமான சித்திரை முதல் நாளான இன்று சூரிய ஒளி மூலவர் மீது விழும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டுச் சிறப்பு ஹோமமும் சிறப்புப் பூசைகளும் நடைபெற்றது.

பட்டினி நிலையைப் பாட்டாகப் பாடி பாடகர்கள் ஆட்சியரிடம் நிவாரணம் கேட்பு: கொரோனா அவலம்!

தொடர்ந்து மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சூரிய உதயம் தொடங்கிய சிறிது நேரத்தில் சூரிய ஒளி மூலவர் மீது விழுத் தொடங்கியது. அதன்பின் சாமிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

நேற்றைய தினம் நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்த காரணத்தால் அதிகாலையில் ஏற்பட்ட மேகமூட்டம் காரணமாகச் சூரிய ஒளியின் வெளிச்சம் குறைவாகக் காணப்பட்டது.

அடுத்த செய்தி