ஆப்நகரம்

நாட்டு வெடிகுண்டை வாயில் கடித்த சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்..! நெல்லையில் பரபரப்பு

நெல்லை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 3ம் வகுப்பு மாணவனின் தாடை சிதைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Jul 2020, 5:37 pm
நெல்லை மாவட்டம் கரியமங்கலத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன், இவரது மகன் தீபக் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், தீபக் இன்று தனது நண்பர்களுடன் அருகிலுள்ள வன பகுதியில் விளையாடி கொண்டிருந்தபோது, நாட்டு வெடிகுண்டு கிடைத்துள்ளது. அதனை, விளையாட்டாக தீபக் வாயில் வைத்து கடித்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுவன் படுகாயம்


இதனால், நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் சிறுவனின் வாய் பகுதி கிழிந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து தீபக்கின் பெற்றோர் உடனடியாக அவனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தீபக் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார்.

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சமூக விரோதிகள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வன பகுதியில் வைத்துள்ளதாகவும், அவர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அடுத்த செய்தி