ஆப்நகரம்

4 மாத கர்ப்பிணி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீர் போராட்டம்... காரணம் என்ன?

நெல்லை மாவட்டம் அம்பை அருகே 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கண்ணீர் மல்க போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Samayam Tamil 26 Sep 2021, 9:20 pm

ஹைலைட்ஸ்:

டைவர்ஸ் கேட்டு கணவர் கொடுமை!
நெல்லையில் 4 மாத கர்ப்பிணி போராட்டம்
காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா வி.கே.புரம் சங்கரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் மகாராஜனும், சுபபிரியா என்ற பெண்ணும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், சுபபிரியா மீண்டும் கருவுற்று 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் தனது கணவர் விவாகரத்து கேட்டு தன்னை தினமும் அடித்து சித்திரவதை செய்வதாக சுபபிரியா வி.கே.புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் மகாராஜனின் தந்தை கிராம உதவியாளர் பதவியில் இருப்பதால் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சுபபிரியா தனது குடும்பத்தினருடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீரோடு போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் சுபபிரியா மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டத்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் விவகாரத்து கேட்டு தன்னை அடித்து சித்திரவதை செய்து வருவதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். மேலும், இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தனக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் சுபபிரியா கேட்டுக்கொண்டார்.

நான்கு மாத கர்ப்பிணி பெண்ணை விவாகரத்து கேட்டு கொடுமை செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுபபிரியா குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி