ஆப்நகரம்

இளைஞரிடம் 45 லட்சம் ரூபாய் அபகரித்தவர்கள் கைது!

குற்றாலம் அருகே வீடு விற்பதாக கூறி, கேரள வாலிபரிடமிருந்து 45 லட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த வீட்டு உரிமையாளர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 23 Oct 2020, 1:55 pm
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் குற்றாலம் அருகே நன்னகரத்தில் நாகூர் மீரான் என்பவரது வீடு ஒன்றை விலைக்கு வாங்க முயற்சித்துள்ளார்.
Samayam Tamil பண மோசடி
குற்றாலத்தில் இளைஞரிடம் பண மோசடி


இதற்காக 45 லட்சம் ரூபாய் பணத்துடன் வந்த அவரை, வீட்டை விற்பதாக கூறி வீட்டு உரிமையாளர் நாகூர் மீரான், கழுகு மலையைச் சேர்ந்த அணில் குமார், கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நசீர் , இலஞ்சியை சேர்ந்த மணிகண்டன் ,சதீஷ்குமார் ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை அபகரிப்புச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்துல் காதர் கொடுத்த புகாரின் பேரில் குற்றாலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

நெல்லை: கோயில் நிலத்துக்குப் பட்டாவா? இந்து அமைப்புகள் போராட்டம்

அவர்களிடமிருந்து பணமும் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து 45 லட்ச ரூபாய் பணமும், இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அடுத்த செய்தி