ஆப்நகரம்

தொடரும் செவிலியர்கள் போராட்டம்... கைகோர்த்த 5 மாவட்டங்கள்

நெல்லையில் நடைபெற்ற செவிலியர்கள் போராட்டத்தில் 5 மாவட்ட தலைமைகள் இணைந்துள்ளது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Jan 2021, 8:32 am
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும் அரசுத்தரப்ப்பு இதில் பாராமுகமாக இருந்து வருகிறது என்று குற்ரசாட்டுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இந்நிலையில், நெல்லையில் நடைபெற்ற செவிலியர்கள் போராட்டத்தில் 5 மாவட்ட தலைமைகள் இணைந்துள்ளது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளது.
Samayam Tamil 5 district nurses joined in nurses protest at tirunelveli
தொடரும் செவிலியர்கள் போராட்டம்... கைகோர்த்த 5 மாவட்டங்கள்


​போராட்டம்:

மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் , சம வேலைக்கு சம ஊதிய வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை பாளையங்கோட்டையில் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பல்வேறூ மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

​கோரிக்கைகள்:

தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட செவியலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதிய வழங்க வேண்டும்.

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

விடுப்பு மற்றும் அதற்கான பலன்கள் வழங்கப்பட வேண்டும். என்பன உள்ளிட்ட கொரிக்கைகளைப் பிரதானமாக முன்வைக்கின்றனர்.

​5 மாவட்ட தலைமைகள்:

தங்கள் நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை பாளையங்கோட்டை சித்த மருத்துவமனை எதிரே நெல்லை மாவட்ட செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் செவிலியர்கள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இப்போராட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர்கள் ஆஷா ஆலிஸ் மாதரசி (திருநெல்வேலி), ஜான் பிரிட்டோ (கன்னியாகுமரி), சரஸ்வதி (தென்காசி), கலையரசி (தூத்துக்குடி), ஜேசுடெல்குயின் (விருதுநகர்) உள்ளிட்டோர் கூட்டு தலைமை வகித்து இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

​அடுத்து சென்னை DMS தான்:

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் பதாதைகள் ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தி முழங்கங்கள் எழுப்பினர் . இந்த போராட்டத்தில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை , தூத்துக்குடி, தென்காசி , கன்னியாகுமரி , மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .

தங்கள் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் அடுத்தகட்டமாக சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர் .

அடுத்த செய்தி