ஆப்நகரம்

தூங்கிய சிறுமி..இடிந்தது வீடு; அப்புறம் என்ன ஆச்சு பாருங்க!

நெல்லையில் 3 வயது சிறுமி ஒருவர் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது கனமழை பெய்ததில் வீடு இடிந்து விழுந்தது.

Samayam Tamil 27 Nov 2021, 9:25 am
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கீழபத்தை, வடக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சூர்யா (25). இவர்களது குழந்தை அருள் பேபி (3).
Samayam Tamil இடிந்து விழுந்த வீடு
இடிந்து விழுந்த வீடு


நேற்று காலை முதல் பெய்து வரும் தொடர் மழையால் இவர்களின் வீட்டின் சுவர் நனைந்து இருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் பின்பக்க சுவர் திடீரென இடிந்து வீட்டிற்குள் விழுந்தது.


அப்போது வீட்டின் அறையில் தூங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை அருள் பேபி மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தது. இதில் குழந்தை அருள் பேபி படுகாயம் அடைந்தாள். அவரது தாய் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ரேஷன் கார்டுதாரர்கள் செம ஷாக்; தமிழக அரசுக்கும் கடும் கண்டனம்!

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி அருள் பேபி பரிதாபமாக உயிரிழந்தது.

பாமகவினரை பதறவிட்டார் ராமதாஸ்; மாடு மேய்க்கும் சிறுவனுக்கு பொறுப்பு!

இதுகுறித்து களக்காடு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கன மழைக்கு பெண் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி