ஆப்நகரம்

கோவிலுக்குள் மது விருந்து.. தட்டி கேட்ட பணியாளர் வெட்டி கொலை.. நெல்லை பயங்கரம்

நெல்லையில் கோவில் பராமரிப்பு பணியாளரை வெட்டி கொலை செய்த கும்பல்

Samayam Tamil 16 Jan 2023, 6:55 pm
நெல்லை மாவட்டம் மேலச்செவல் கிருஷ்ணன் கோவில் கோவில் வளாகத்தில் மது அருந்திக் கொண்ட சிலருக்கும் கோவில் பராமரிப்பு பணியாளருக்கும் இடையே மோதல்; பணியாளர் மர்ம நபர்களால் வெட்டி கொலை
Samayam Tamil nellai news


நெல்லை மாவட்டம் மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு வயது 55. இவர் அப்பகுதியில் உள்ள பழமையான நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் பராமரிப்பு பணி செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கமான பணிகளை முடித்துவிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்ற அவர் மீண்டும் திரும்பி வந்த போது கோவில் வளாகத்தில் அதே பகுதியை சேர்ந்த கொம்பையா உட்பட பலர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தட்டி கேட்டு அவருக்கும் மது அருந்தி கொண்டிருந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகளைப்பாக மாறியது. பின்னர் கிருஷ்ணனை அவர்கள் அறிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணனை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி