ஆப்நகரம்

திமுக கோஷ்டி மோதல்; போலீஸ் படுகாயம்!

திமுக கோஷ்டி தள்ளுமுள்ளுவில் சிக்கி போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Apr 2022, 10:27 pm
தமிழகம் முழுவதும் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மத்திய மாவட்டத்தின் தேர்தல் நடத்தும் அலுவலராக வழக்கறிஞர் கண்ணதாசன் தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil மோதிக்கொள்ளும் திமுகவினர்
மோதிக்கொள்ளும் திமுகவினர்


இதையடுத்து கண்ணதாசன் நெல்லை மத்திய மாவட்ட அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று திருநெல்வேலி மாநகர பகுதியில் உள்ள 55 வட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் வட்ட செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மாவட்ட செயலாளராக உள்ள அப்துல் வகாப் தரப்பினர் வாயில்களை மூடிக் கொண்டு மற்றொரு தரப்பான மாநகர செயலாளர் ஏ.எல்.எஸ் லட்சுமணன், முன்னாள் மாநகர செயலாளர் மாலைராஜா தரப்பை சேர்ந்த நபர்களை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை என தெரிகிறது.

பீதியில் உறைந்த எச்.ராஜா; ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்!

இதனால் எதிர் தரப்பை சேர்ந்தவர்களின் கூட்டம் மேலும் அதிகமானது. மூடப்பட்ட வாயில்களை திறந்துகொண்டு கூட்டமாக உள்ளே நுழைந்த லட்சுமணன் மற்றும் மாலைராஜா தரப்பினர் தங்களது ஆதரவு பெற்ற கட்சியினரை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தனர்.

இதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் மோதல் காரணமாக பாதுகாப்பிற்கு நின்ற உலகு சங்கர் என்ற காவலருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு அலறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீசார் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தெறிக்க விட்ட ரேஷன் ஊழியர்கள்; செய்வதறியாமல் திகைக்கும் அரசு!

திருநெல்வேலி மத்திய மாவட்டத்தை பொறுத்தவரை திருநெல்வேலி மாநகராட்சி மானூர் ஒன்றியம், நாரணம்மாள்புரம் மற்றும் சங்கர்நகர், பேரூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது.

இவர்களில் பெரும்பாலான வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர் தற்போதைய மாவட்ட செயலாளருக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்டாலினே மன்னிப்பு கேள்; திடீர் போஸ்டர்.. திமுக ஷாக்!

இதனால் அவரின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்ததாக புகார் தெரிவித்த நிலையில், தற்போது இரு தரப்பினரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட உட்கட்சித்தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் இந்த தேர்தல் வருகிற 7ம் தேதி வரை தேர்தல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுபோன்று உள்கட்சியினரிடையே மோதலை தவிர்க்கும் பொருட்டு கட்சியின் தலைமை மூத்த உறுப்பினர்களை வட்டச் செயலாளர்களாக அறிவிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி