ஆப்நகரம்

ஊரடங்கால் கலையிழந்த ஆடிப்பெருக்கு: வெறிச்சோடிய கோயில்கள்!

கொரோனா ஊரடங்கால் நெல்லையில் ஆடிப்பெருக்கு பண்டிகை கலையிழந்துள்ளது.

Samayam Tamil 2 Aug 2020, 3:38 pm
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் ஆடி பெருக்கு பண்டிகை கலையிழந்தது.
Samayam Tamil ஆடிப்பெருக்கு


நெல்லை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த நாளில் ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பதும், இன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பதும் மக்களின் நம்பிக்கை.



உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் விதை விதைத்து விவசாய பணியினை தொடங்குவர். புதிய கட்டிட பணி மற்றும் புதிய முயற்சிகளை இன்று துவக்குவது வழக்கம். ஆடி பெருக்கு விழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாடவிட்டாலும் ஜீவ நதியான தாமிரபரணி பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி வணங்குவது வழக்கம். அதுபோல நதிக்கரையோரத்தில் தாலி பிரித்து கட்டும் நிகழ்வும் நடைபெறும்.

இன்றைய சூழ்நிலையில் பொது மக்கள் நதிக்கரையோரம் போக முடியாத காரணத்தால் பெரும்பாலனோர் வீட்டிலேயே பூஜைகளில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவில் பகுதியில் குறைந்தளவில் வந்த தம்பதியினர் தங்களுக்கு வாழ்வு அளிக்கும் நதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பூஜைகளில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி