ஆப்நகரம்

ஆடிப்பூர திருவிழா நெல்லையில் அனல் பறக்கும் விழா!

நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் திருக்கோயில் ஆடிப்பூர திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Samayam Tamil 10 Aug 2021, 11:16 pm
நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாகப் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கவில்லை.
Samayam Tamil ஆடிப்பூர திருவிழா நெல்லையில் அனல் பறக்கும் விழா!


திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டும் திருவிழா இன்று அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த திருவிழாவிற்காகச் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு அதன் பின்னர் காந்திமதி அம்பாளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு அம்பாளுக்கு கண்ணாடி காட்டப்பட்டு நலுங்கு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

செத்தவங்களை அடக்கம் செய்ய முடியல; கலெக்டரிடம் பாதிரியார் பரபரப்பு புகார்!
பின்னர் முளைக்கட்டிய தானியங்களைச் சிறப்புப் பூசை செய்து அம்பாளுக்கு மடியில் கட்டி பூசைகள் செய்யப்பட்டன. பின்னர் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் கொரோனா நோய் பரவல் தடுப்பு விதிமுறைகள் காரணமாகப் பக்தர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்களின்றி திருவிழா நடைபெற்றது.

அடுத்த செய்தி