ஆப்நகரம்

குக்கூ வித் கோமாளி புகழ் திறந்த கடைக்கு அதிகாரிகள் சீல்!

தனியார் தொலைக்காட்சி பிரபல நிகழ்ச்சியின் நகைச்சுவையாளர் புகழ் கலந்து கொண்டு காலையில் திறந்து வைத்த கடைக்கு சுகாதாரத்துறை நிலையில் பிற்பகலில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்குப் பிற்பகலில் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Apr 2021, 5:26 pm
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் புதிய செல்போன் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவியின் குக்கூ வித் கோமாளி பிரபலம் புகழ் கலந்துகொண்டு கடையைத் திறந்து வைத்தார்.
Samayam Tamil குக்கூ வித் கோமாளி புகழ் திறந்த கடைக்கு அதிகாரிகள் சீல்!


காலையில் கடையைத் திறக்கும் பொழுது அவரைக் காண அதிகளவிலான கூட்டம் திரண்டது. கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் புகழ் வந்தததால் அதிக அளவிலான கூட்டம் கூடியது. இதனால் அந்த பகுதியில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்குக் கூடியிருந்தவர்கள் மீது லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.

சாமி சிலையில் சூரியன் விழும் அற்புதக்காட்சி: மணிமூர்திஸ்வரத்தில் சிறப்பு வழிபாடு!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அதிக அளவில் கூட்டம் கூடியதால் காலையில் திறக்கப்பட்ட கடைக்குத் திருநெல்வேலி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பிற்பகலில் சீல் வைத்தனர். மூன்று நாட்களுக்குக் கடை திறக்க தடை விதித்து நிலையில் கடைக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அதேபோல் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அதிக அளவில் கூட்டத்தைக் கூட்டி நோய்த் தொற்றைப் பரப்பியதாகக் கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சின்னதிரை பிரபலம் புகழ் கலந்துகொண்டு காலையில் திறந்து வைத்த கடைக்குப் பிற்பகலில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி