ஆப்நகரம்

நல்லாயிருக்குலே விஸ்வாசம்...சிகிச்சையில் இருக்கும் அமைச்சருக்கு இரங்கல் பதிவு போட்ட அதிமுக நிர்வாகி!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக அமைச்சருக்கு, அதிமுக நிர்வாகி ஒருவரே தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டு, கண்ணீர் அஞ்சலி பதிவு போட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Oct 2020, 3:34 pm
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரலில் தொற்று அதிகமாக உள்ளதன் காரணமாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil அதிமுக நிர்வாகி
அதிமுக நிர்வாகி -நெல்லை


இதனையடுத்து, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு சென்று அமைச்சரின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகியும், பாளையங்கோட்டை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான டால் சரவணன், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் துரைகண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார்.


உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக அமைச்சர் ஒருவருக்கு அதிமுக நிர்வாகி ஒருவரே இரங்கல் தெரிவித்து பதிவு வெளியிட்ட நிகழ்வு அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்து அமைப்பினர் 6 பேர் மீது பாய்ந்தது தேசியப் பாதுகாப்புச் சட்டம்!

இந்த பதிவுக்கு அதிமுகவினர் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, அமைச்சர் துரைகண்ணு குறித்த தமது பதிவை டால் சரவணன் சில நிமிடங்களிலேயே தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் என்பது குறி்ப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி