ஆப்நகரம்

வெள்ள அபாயம்: எப்படித் தயாராகிறது திருநெல்வேலி?

தேசிய பேரிடர் மீட்பு படை சேர்ந்த 60 பேர் கொண்ட 3 குழுவினர் அரக்கோணத்திலிருந்து திருநெல்வேலிக்கு வந்துள்ளனர்.

Samayam Tamil 3 Dec 2020, 8:42 am
புரேவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil arrangements of tirunelveli to face burevi cyclone
வெள்ள அபாயம்: எப்படித் தயாராகிறது திருநெல்வேலி?



​மீட்புப் படை:

அதீத கனமழையின் காரணமாக பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை சேர்ந்த 60 பேர் கொண்ட 3 குழுவினர் அரக்கோணத்திலிருந்து திருநெல்வேலிக்கு வருகை தந்துள்ளனர்.

முன்னதாக சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தேசிய பேரிட மீட்ப்பு ப்டையினரின் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

​முகாம்கள்:

வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதல் பாதுகாப்பு வேலை அவர்களை இடம்பெயர் வைப்பது. இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்கள் தங்குவதற்கான முகாமை ஆய்வு செய்து வருகின்றனர்.

​பகுதிகளைக் கண்டறிதல்:

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வரை நான்கு பகுதிகள் பேரிடர் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு தேவையான மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவின் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

​ஆலோசனைக் கூட்டம்:

இதனிடையே அதீத மழையை எதிர்கொள்வது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தலைமையில் ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மதியம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப படுகிறது.

அடுத்த செய்தி