ஆப்நகரம்

விரைவில் நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் திறப்பு: அதிகாலையில் தொடங்கிய பணிகள்!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் மண்ணை அகற்றும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 28 Nov 2022, 3:46 pm
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பேருந்து நிலைய கட்டுமானத்திற்கு இடையூறாக குவித்து வைக்கப்பட்டிருந்த பல நூறு டன் மண் குவியல் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அதிகாலை முதல் அகற்றும் பணியை நெல்லை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.
Samayam Tamil nellai bus stand


கட்டுமான பணிக்கான அஸ்திவாரம் தோண்டும்போது கிடைக்கப்பெற்ற பல நூறு டன் கணக்கில் உள்ள மண் ராமையன் பட்டியில் உள்ள மாநகராட்சி சொந்தமான இடத்தில் சேமித்து வைக்கப்படுகிறது.

நெல்லை மாநகரின் பழைய பேருந்து நிலையம் என்றழைக்கப்படும் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் கடந்த 2018 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் வணிக வளாகங்கள் மற்றும் பார்க்கிங் வசதியுடன் நவீன பேருந்து நிலையமாக 78 கோடியே 51 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
கிட்டத்தட்ட 80% பணிகள் முடிவுற்ற நிலையில் பேருந்து நிலைய கட்டுமான பணியின் போது அஸ்திவாரம் தோண்டும் போது எடுக்கப்பட்ட மண்ணை விற்பனை செய்வதில் சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதைத்தொடர்ந்து நீதிமன்றம் விசாரணை நடத்தியது. பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக நீதிமன்றம் சார்பில் புவியியல் வல்லுநரும் வழக்கறிஞருமான கே கலைவாணன் ஆணையாளராக நியமிக்கப்பட்டு ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன .

இந்நிலையில் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் டன் கணக்கில் மணல் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரியார் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் இறுதி நிலையில் தொடர முடியாமலும் அதனால் பேருந்து நிலையம் திறக்க முடியாத நிலையில் உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தில் பேருந்து நிலையத்தில் உள்ள மணல் குவியல்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நீதிமன்றம் இதற்காக வழக்கறிஞர் ஆணையாளராக வேலுச்சாமியை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. அவர் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின் மண் குவியலை வேறு இடத்திற்கு மாற்ற கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சாலைகளில் பைக் சாகசம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் மண்ணை மாற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அள்ளப்படும் மண் ராமையன்பட்டி குப்பை கிடங்கு அருகில் வைக்கப்பட உள்ளது. இதற்காக மண் எடுக்கும் பேருந்து நிலைய கட்டுமானப்பகுதி மற்றும் மண்ணை சேமித்து வைக்கும் ராமையன்பட்டி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பணிகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி