ஆப்நகரம்

கிணற்றில் விழுந்த கரடிக்குட்டி... மீட்கும் பணி தீவிரம்

சுற்றித்திரிந்த கரடி ஒன்று விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிருக்கு போராடி வந்தது.

Samayam Tamil 24 Nov 2020, 10:19 am
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த கரடியை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil கிணற்றில் கரடிக்குட்டி


இரை தேடியோ அல்லது வழிமாறியோ ஊருக்குள் வரும் விலங்குகள், குழிகளுக்குள்ளும் ஊர்க்காரர்களின் பொறிகளுக்குள்ளும்

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது களக்காடு இதன் அருகே உள்ளது சிங்கிகுளம் கிராமம் இங்கு கிராமத்திற்குள் வனப் பகுதயில் இருந்து வெளியேறி கரடிகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வழக்கம்.

இந்த பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த ஐந்துக்கும் மேற்பட்ட கரடிகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சுற்றித்திரிந்த கரடி ஒன்று இரவில் சிங்கிகுளம் பகுதியில் கால்புரவு என்ற இடத்தில் உள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிருக்கு போராடி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து கரடியை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக பள்ளிகள் திறப்பு உறுதி? குடும்ப நலத்துறை புதிய உத்தரவு!

சில தினங்களுக்கு முன்பு, யானை ஒன்று 50 அடி பள்ளத்துக்குள் விழுந்து 15 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி