ஆப்நகரம்

அதிமுக விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு... பாஜக நயினார் நாகேந்திரன் கருத்து!

தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது குறித்து நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Jul 2021, 11:16 pm

ஹைலைட்ஸ்:

  • மாஞ்சாலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினம் இன்று அனுசரிப்பு.
  • பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தாமிரபரணியில் மலர் தூவி மரியாதை.
  • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து அவர் கருத்து.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தியபோது மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தின் 22 ஆவது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தனது ஆதரவாளர்கள் உடன் சென்று தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேர்களுக்கு பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ' போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் M.R. விஜய பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொள்ளபட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம்' என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு மணி மண்டபம்... காங்கிரஸுக்கு திடீர் அக்கறை!

இதனிடையே, மாஞ்சாலை தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறி மாவட்ட பாஜக தலைவர் மகாராஜன் தலைமையில் கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தம் அருகே மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனை கண்டு கொள்ளாமல் நயினார் நாகேந்திரன் தனது காரில் சர்ரென புறப்பட்டு சென்றார்.

அடுத்த செய்தி