ஆப்நகரம்

கொரோனாவுக்குப் பிறகான முதல் புத்தகக் கண்காட்சி நெல்லையில் தொடக்கம்

கொரோனாவால், புத்தக் கண்காட்சிகளுக்கு இனி இடமில்லாமல் போகுமோ என்று புத்தகப் பிரியர்கள் வருத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புத்தகக் கண்காட்சி நடைபெறுவது, வாசகர்களுக்கு புது விதமான நம்பிக்கையை அளித்துள்ளது.

Samayam Tamil 20 Oct 2020, 11:59 am
கொரோனா காலத்துக்குப் பிறகு இனி புத்தகக் கண்காட்சிகள் நடக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்த நிலையில், இன்று நெல்லையில் புத்தகக் கண்காட்சி தொடங்கியுள்ளது.
Samayam Tamil book fair started in tirunelveli after corona outbreak
கொரோனாவுக்குப் பிறகான முதல் புத்தகக் கண்காட்சி நெல்லையில் தொடக்கம்


தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்பது நாட்கள் நடைபெறும் வகையில் புத்தகத்திருவிழா தொடங்கியது. சுமார் 5000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இந்தப் புத்தகத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.

இந்த மெகா புத்தகத்திருவிழா தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இன்று முதல் 9 நாட்கள் நடைபெறும் வகையில் இந்தப் புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ள பிரசித்தி பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் 12 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 5000 தலைப்புகளில் சுமார் 5 லட்சம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலக்கியம், கவிதை, கட்டுரை, அறிவியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வாசகர்களை கவரும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள், குழந்தைகளுக்கான கலை மற்றும் அறிவியல் புத்தகங்கள், ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு தரப்பை கவரும் வகையிலான புத்தகங்களும் இந்தப் புத்தகத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.


கொரனா நோய் தொற்று பரவும் காலம் என்பதால் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களை மட்டும் புத்தகத் திருவிழாவில் அனுமதிக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



கொரோனா தொற்றால், மக்கள் கூடுவது என்பதே குற்றமாகப் பார்க்கப்படும் நிலையில், புத்தக் கண்காட்சிகளுக்கு இனி இடமில்லாமல் போகுமோ என்று புத்தகப் பிரியர்கள் வருத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது புத்தகக் கண்காட்சி நடைபெறுவது, வாசகர்களுக்கு புது விதமான நம்பிக்கையை அளித்துள்ளது.

அதே சமயம் தொற்றுள்ள ஒருவர் தொட்ட புத்தகத்தை மீண்டும் மீண்டும் மற்றவர்கள் தொடும் வாய்ப்பு புத்தகக் கண்காட்சிகளில் அதிகம். எனவே மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதும் அவசியம்.

அடுத்த செய்தி