ஆப்நகரம்

வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

அவரது தம்பி ஜெகதீசனின் மகன் செந்தில்ராஜன் தலைமையில், 12 பேர் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது.

Samayam Tamil 24 Nov 2020, 10:33 am
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வைகுண்டராஜன். இவர் சில் தினங்களுக்கு முன்பு, தன் உறவினர் ஒருவர் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாகப் பரபரப்புப் பேட்டியளித்தார். இதன் விளைவாக, தற்போது வைகுண்டராஜனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil vaikundarajan


என்னை ஒரு கும்பல் வாகனங்களில் பின்தொடர்ந்தது. காரில் என்னைக் கடத்தி கொல்ல முயற்சி செய்தனர். இதுதான், வைகுண்டராஜன் வைத்த குற்றச்சாட்டு.

இது குறித்து, திருநெல்வேலி டி.ஐ.ஜி., பிரவீன்குமார் அபினபுவிடம் புகார் அளித்தார் வைகுண்டடராஜன். விசாரணையில், அவரது தம்பி ஜெகதீசனின் மகன் செந்தில்ராஜன் தலைமையில், 12 பேர் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது.

2021 தேர்தலில் பலத்த அடி; சொல்லிவச்சு நேரடியாக களமிறங்கும் ஸ்டாலின்!

பெருமாள்புரம் போலீசார், 12 பேர் மீதும் கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.தற்போது, வைகுண்டராஜனுக்கு பகலில் இருவர், இரவில் இருவர் என, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி