ஆப்நகரம்

செக் மோசடி... தலைமறைவான வங்கி ஏஜென்ட்டை தேடும் சங்கரன்கோவில் போலீஸ்!

வங்கி முகவர் போர்வையில் பல லட்ச ரூபாய் நூதன மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானவரை போலீசார் தேடிவருகின்றனர்.கூட்டு சதி மூலம் வங்கியில் நூதன மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உள்ளிட்ட மூவர் மீது சங்கரன் கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 21 Jan 2021, 12:40 pm
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கச்சேரி சாலையில் வசித்து வருபவர் முன்னாள் அறநிலையத் துறை ஊழியர் அழகப்பன். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதே சமயம் பணி நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருந்துள்ளது.
Samayam Tamil வங்கி ஏஜென்ட் முத்துகுமார்
சங்கரன்கோவிலில் செக் மோசடியில் ஈடுபட்ட ஏஜென்ட் முத்துகுமார்


சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் கடந்த மார்ச் மாதம் அறநிலையத் துறை திருக்கோவில் நிர்வாகம், அழகப்பனுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மாற்றத்தக்க முறையில் ரூபாய் 1, 88, 900 தொகைக்கான காசோலை வழங்கியது.

இந்நிலையில் சங்கரன்கோவில் இந்தியன் வங்கிக் கிளையில் முகவராக பணியாற்றிய தபசு நகரைச் சேர்ந்த முத்துக்குமார், அழகப்பனுக்கு வந்த காசோலை குறித்து அறிந்து அவரிடம் தான் வங்கி மூலம் காசோலையை மாற்றி தருவதாகவும், அதனால் தனக்கு கமிஷன் கிடைக்கும் என்றும் கூறியதை நம்பிய அழகப்பன் காசோலையை முத்துக்குமாரிடம் வழங்கியுள்ளார்.

தேர்தல் பரப்புரையை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்... காரணம் தெரிஞ்சா அசந்திடுவீங்க!

வங்கிக் கிளையில் புதிய கணக்கு தொடங்குவதற்கான படிவங்களில் அன்பழகன் கையொப்பமிட்டும் கொடுத்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முத்துக்குமார், கிளை மேலாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் உதவியுடன் ஒரு லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றி நூதன மோசடியில் ஈடுபட்டதுடன் பணத்துடன் தலைமறைவானார்.

காசோலையை வாங்கிச் சென்ற முத்துக்குமாரிடம் இருந்து எந்த தகவலும் வராததையடுத்து சந்தேகமடைந்த அழகப்பன், சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் முத்துக்குமார், அவரது தந்தை, வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது புகார் அளித்தார்.

சிக்கன் புரோட்டா சாப்பிட வழிப்பறி.. கொள்ளையரை வளைத்த நெல்லை போலீஸ்!

இப்புகாரின் மீது நீண்ட நெடுநாட்களாக வழக்குப்பதிவு செய்யாமல் நிலுவையில் இருந்ததை கண்டு உயரதிகாரிகள் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து சங்கரன்கோவில் நகர போலீசார், முத்துக்குமார் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி