ஆப்நகரம்

பொங்கல் பரிசு: 2500 ரூபாயை முதல்வருக்கே திருப்பி அனுப்பிய முதியவர்

உளுந்தம் பருப்பு போன்ற உணவுப் பொருட்களை விலையின்றி வழங்கலாம் என பரிந்துரைக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

Written byபாம்பன் மு.பிரசாந்த் | Samayam Tamil 9 Jan 2021, 4:52 pm
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகை 2500 ரூபாயை பெற்ற ஒருவர், அந்த தொகை உடனடியாக முதல்வருக்கு டிமாண்ட்ராப்ட் மூலம் அனுப்பி வைத்ததுடன், இதற்கு பதிலாக முன்பு போட்டது போல் நியாய விலைக்கடையில் உளுந்தmபருப்பு போன்ற உணவுப்பொருட்களை விலையின்றி வழங்கலாம் என கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
Samayam Tamil citizen returned pongal gift amount 2500 to cm edappadi palaniswami
பொங்கல் பரிசு: 2500 ரூபாயை முதல்வருக்கே திருப்பி அனுப்பிய முதியவர்


​அரசா? ஆளுங்கட்சியா?

தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு, தேர்தல் பிரசார உத்திகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற் போலவேஎல்லா ரேஷன் கடை வாசல்களிலும் அதிமுகவினரின் விளம்பர பேனர்கள் வரிசை கட்டி நிற்கின்றன. விநியோகமும் பெரும்பாலான இடங்களில் ஆளுங்கட்சியினரால்தான் செய்யப்படுகிறது. பரிசுப்பொருட்களுடன் இந்த ஆண்டு 2500/- ரூபாய் பணமும் வாழ்ங்கப்படுகிறது.


இந்த பணம் எப்படியும் டாஸ்மாக் வழியாக அரசுக்கே வந்துவிடும் என்று பேசினார் அமைச்சர் ஒருவர். இதே கவலை தமிழகக் குடும்பங்களின் பெண்களுக்கும் உள்ளது. இந்த சூழலில் அரசுக்கு எதிர்நிலைப் பதில் சொல்லும் விதமாகவும், இந்தத்திட்டத்தின் மீதான விமர்சனமாகவும் ஒரு நடடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதியவர் ஒருவர்.

​யார் இவர்:

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகே உள்ள திருமலையப்பபுரத்தை சேர்ந்தவர் ராமநாதன். தற்போது 74 வயதைத் தொடும் இவர், இந்தியாவின் ஒரு சுதந்திர போராட்ட வீரர். வீரன் வாஞ்சிநாதனின் பெயரில் வாஞ்சி இயக்கம் என்ற ஒரு அமைப்பையும் இவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

​என்ன செய்தார்:

தமிழக அரசு தற்போது பொங்கல் பரிசாக வழங்கி வரும் 2500 ரூபாயை பெற்ற இவர், தமிழக அரசுக்கு அதனை வரைவோலையாக எடுத்து ( டிமாண் ட்ராப்ட் - DD) ஆக திருப்பி அனுப்பி உள்ளார். இதற்குப் பதிலாக உபயோகமான வகையில் ஏதாவது வழங்கும்படி பரிந்துரைத்து கடிதம் ஒன்றையும் இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளார் இந்தப் பெரியவர்.

​கடிதத்தில் இருந்தது என்ன?

மேலும் இவர் முதல்வருக்கு அனுப்பிய அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு தற்போது 2500 ரூபாய் வழங்குகிறது இந்த பணம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு மட்டும் முழுமையாக பயன்படும் என்று சொல்ல முடியாத.

மதுக் கடைகள் மூலமாக தமிழக அரசுக்கு திரும்ப செல்லும் தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்குவதற்கு பதிலாக ரேஷன் கடைகளில் முன்பு வழங்கப்பட்டு தற்போது வழங்கப்படாமல் இருக்கும் உளுந்தம் பருப்பு போன்ற உணவுப் பொருட்களை மாதந்தோறும் விலையின்றி வழங்கலாம்.

அவ்வாறு வழங்கினால் பொதுமக்கள் மிகவும் பயன் அடைவார்கள் ,இந்தியாவிலேயே ரேஷன் பொருள்களை விலை இன்றி வழங்கும் தமிழக அரசு என்று பெயர் பெறலாம் இதனால் நான் பொங்கல்பரிசு திரும்ப முதல்வருக்கு அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி