ஆப்நகரம்

மசாஜ் செண்டரில் மாணவர்கள்; காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

மசாஜ் செண்டருக்கு வந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. அவர்களது மானத்தை காப்பாற்றிய போலீசாருக்கு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Samayam Tamil 3 Feb 2022, 7:24 am
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளை பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு நேரத்தில், இந்த மசாஜ் செண்டருக்கு கல்லூரி மாணவர்கள் 5 பேர் வந்து, மசாஜ் பெற்று உள்ளனர்.
Samayam Tamil மசாஜ் செண்டர்
மசாஜ் செண்டர்



இதை கண்ட 2 வாலிபர்கள் மாசாஜுக்கு வந்த மாணவர்களை செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் படம் எடுத்த வாலிபர்களை கண்டித்து உள்ளனர்.

மதிமுகவுக்கு ‘ 0 ’; கொரோனாவிலும் கொந்தளித்த வைகோ!

பின்னர், செல்போனில் பதிவு செய்யப்பட்ட படங்களை உடனே அழிக்குமாறு மாணவர்கள் கூறி உள்ளனர். அதற்கு அந்த வாலிபர்கள், ‘உங்கள் படங்களை அழிக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும்’ என மிரட்டி உள்ளனர்.

இதையடுத்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர். தகவலறிந்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

பள்ளிகளுக்கு வந்த உத்தரவு; மாணவர்கள், பெற்றோர் ஹேப்பி!

பின்னர் அவர்களது செல்போனை பறிமுதல் செய்து, அதில் இருந்த மாணவர்களின் படத்தை அழித்ததோடு அந்த வாலிபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் கல்லூரி மாணவர்களுக்கும் போலீசார் தகுந்த அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

மசாஜ் செண்டருக்கு வந்த கல்லூரி மாணவர்களை படம் பிடித்து அதை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி