ஆப்நகரம்

சைக்கோ மனநிலை... நெல்லை ஏஎஸ்பி-ஐ இன்னும் சஸ்பெண்ட் செய்யாமல் இருப்பது ஏன்..?

கஸ்டடி சித்திரவதை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நெல்லை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கண்டனங்கள் வலுத்து வருகிறது.

Samayam Tamil 27 Mar 2023, 6:58 pm
சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நண்பர்களை மிக கொடூரமாக அடித்து கட்டிங் பிளேடை கொண்டு பல்லை பிடுங்கியதாக நெல்லை ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது பல பேர் குற்ற சாட்டு வைத்து வருகின்றனர். விஷயம் ஊடகத்துக்கு தெரிய வந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து வாக்குமூலம் கொடுத்து வரும் நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரியை விசாரிக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டுள்ளார்.
Samayam Tamil nellai asp police


அதனை தொடர்ந்து பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளது காவல்துறை. ஆனால், சைக்கோ படங்களில் வருவதை போன்ற மிக குரூரமான செயலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாமல் இன்னும் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது பொது மக்களுக்கு ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு அதிகாரியை சஸ்பெண்ட் செய்வதுகூட குறைந்தபட்ச நடவடிக்கை என்றுதான் என்றும் இந்த அதிகாரி எந்த மனநிலையில் மீண்டும் பணிக்கு வருவார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் விவாதம் நடந்து வரும் நிலையிலும் நெல்லை ஏஎஸ்பி-யின் விவகாரம் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. விசாரணையில் அவரது குற்றம் நிரூபணமானால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரி பலவீர் சிங்கை உடனடியாக கைது செய்து காவல்துறை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுக்கிறது.

dgp order


ஆனால், கேட்கவே நினைத்து பார்க்கவே கிடுகிடுக்க வைக்கும் பல் பிடுங்கி, பிறப்புறுப்பை நசுக்கி என்னும் ஒரு அதிகாரியை காவல்துறையின் ஆபத்து என கருதாமல், விசாரணைக்கு ஆளாகியும் சஸ்பெண்ட் செய்யாமல், பின்னாளில் பதவியில் அமர்த்த காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது தமிழக அரசின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல் என கருதுவதில் வியப்பேதுமில்லை

அறப்போர் இயக்கம்

இந்த நிலையில், அறப்போர் இயக்கம் இதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளது. ட்வீட்டில், என்ன ஒரு மோசமான சைக்கோ மனநிலை கொண்ட மனிதராக இருந்திருந்தால் இப்படிப்பட்ட வேலைகளை செய்திருப்பார்? சம்பளம் கொடுத்து காத்திருப்பு பட்டியலில் வைப்பதெல்லாம் ஒரு தண்டனையா? இவரை உடனடியாக பணி நீக்கம் செய்து வழக்கு போட்டு கைது செய்து விசாரிக்க வேண்டும். இது போல இன்னும் எத்தனை பேரை இவர் என்ன என்ன கொடுமைகள் எல்லாம் செய்திருக்கிறார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

அடுத்த செய்தி