ஆப்நகரம்

விவசாயிகள் பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும்: விஜய் வசந்த் கோரிக்கை

கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் பெற இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது: விஜய் வசந்த்

Samayam Tamil 14 Dec 2020, 2:20 pm
விவசாயிகளுக்கு எதிரான போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என நாகர்கோவில் நடந்த மறியல் போராட்டத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
Samayam Tamil vijay-vasanth


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது "விவசாயிகளுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அதுவரை காங்கிரஸ் கட்சியை விவசாயிகளுக்காக போராடும்" என்றார்.

இன்னையில இருந்து திரும்பவும் நீங்க மெரினா பீச்சுக்கு போகலாம்!

மேலும், “விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக நிற்கும். கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் பெற இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் எனவே இந்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர் இந்த போராட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி