கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நெல்லையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக இரண்டாவது அலையில் இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1, 291 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சைக்கிளில் சென்ற இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்... 'ஸ்மார்ட்சிட்டி'யில் இப்படியொரு துயரம்!
ஏற்கெனவே நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,240 படுக்கையில் உள்ளன. அதேவேளையில் ஊரகப் பகுதிகளிலும் சிகிச்சை அளிப்பதற்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று மாநகரப் பகுதியில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கை வசதிகளும், பத்தமடை சுவாமி சிவானந்தா தர்ம நூற்றாண்டு மருத்துவமனையில் 110 படுக்கைகளும், கூடங்குளம் அரசு மருத்துவமனையில் 105 படுக்கைகளும் என மொத்தமாக 1,655 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சைக்கிளில் சென்ற இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்... 'ஸ்மார்ட்சிட்டி'யில் இப்படியொரு துயரம்!
ஏற்கெனவே நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,240 படுக்கையில் உள்ளன. அதேவேளையில் ஊரகப் பகுதிகளிலும் சிகிச்சை அளிப்பதற்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று மாநகரப் பகுதியில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கை வசதிகளும், பத்தமடை சுவாமி சிவானந்தா தர்ம நூற்றாண்டு மருத்துவமனையில் 110 படுக்கைகளும், கூடங்குளம் அரசு மருத்துவமனையில் 105 படுக்கைகளும் என மொத்தமாக 1,655 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.