ஆப்நகரம்

ஒருநாள் கொரோனா பாதிப்பா... இது?; வாய் பிளக்கும் மக்கள்!

ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து பொதுமக்கள் மிரண்டு போய் உள்ளனர். கொரோனா தொற்று கோர தாண்டம் ஆடுவதால் மக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

Samayam Tamil 30 Jan 2022, 11:22 am
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil திருநெல்வேலி அரசு மருத்துவமனை
திருநெல்வேலி அரசு மருத்துவமனை




அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது.

மிரண்டு போன தேர்தல் அதிகாரிகள்; வாக்கு சாவடியில் செத்து கிடந்தது யானை!

இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது கொரோனா நோய் பரவல் குறைந்துவிட்டதாக கருதப்படுவதாலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளாலும் இந்த ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கும் தமிழகத்தில் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு திடீர் உத்தரவு; பீதியில் உறைந்த டாக்டர்கள்!

ஆனாலும் கூட திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 436 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இது சுகாதார துறையினருக்கும் கடும் அதிர்ச்சியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இந்த 436 பேருடன் சேர்த்து கொரோனா நோய் பாதித்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 385 ஆக உயர்ந்து காணப்படுகிறது. தொற்று பாதித்தவர்களில் 55 ஆயிரத்து 843 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்டனர்.

வச்சி செய்த அமைச்சர்.. விடுதலை சிறுத்தைகள் செம ஷாக்!

அதேபோல் தென்காசி மாவட்டத்திலும் புதிதாக 283 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 792 ஆக உயர்ந்து காணப்படுகிறது.

இவர்களில் 28,934 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 2,370 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையிலும் மொத்தம் 4,88 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர்.

அடுத்த செய்தி