ஆப்நகரம்

குற்றாலத்தில் இனிமேல் இப்படித்தான் குளிக்க வேண்டும்... புதிய கட்டுப்பாடுகள்

காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வரிசையாக நின்று செல்ல வேண்டும்

Samayam Tamil 15 Dec 2020, 12:36 pm
தென்காசி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சில கண்டிஷன்களையும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
Samayam Tamil courtallam falls new conditions for bath
குற்றாலத்தில் இனிமேல் இப்படித்தான் குளிக்க வேண்டும்... புதிய கட்டுப்பாடுகள்


வெறிச்சோடிய அருவிகள்:

தென் தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலமான குற்றால அருவிகள் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன் , ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். இந்த சீசன் காலகட்டத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் நீராடிச் செல்வது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகை இன்று அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

பயணிகள் வருகை தொடக்கம்:

ஊரடங்குக்குப் பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் குற்றால அருவிகள் மட்டும் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்தது. இதைதொடர்ந்து குற்றாலத்தை திறக்கக்கோரி வியாபாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளைக் கொண்டே வாழ்வாதாரம் அமைத்துக் கொள்ளும் வியாபாரிகள் அதிகம் பேர் குற்றாலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடுகள்:

இந்நிலையில் இன்று முதல் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதி அளிக்கப்படும்.


மேலும் முக கவசம் தனிமனித இடைவெளியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கியுள்ளது.மேலும் தொற்று உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் கண்காணிக்கும்:

இதனை தொடர்ந்து இன்று காலையில் 6 மணியளவில் அருவிக்கரையில் உள்ள தீர்த்தவாரி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அருவிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அறிவியல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் பின்பற்றபப்டுகின்றனவா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி