ஆப்நகரம்

சிலிண்டர் விபத்து... 2 நாட்கள் கழித்து இருவர் பலி

எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி மூவருக்கும் முகம், கைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

Samayam Tamil 27 Dec 2020, 3:34 pm
திருவேங்கடத்தில் கடந்த 23ம் தேதி கியாஸ் சிலிண்டர் பழுது பார்க்கும் போது திடிரென சிலிண்டர் வெடித்த விபத்தில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். அந்த சிலிண்டர் வெடித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Samayam Tamil cylinder burst


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் சரஸ்வதி இண்டேன் கேஸ் ஏஜென்சி அலுவலகத்தில் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து பழுதான கியாஸ் சிலிண்டரை ஊழியர்கள் அலுவலகத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் மேலாளர் வைகுண்டம், மற்றும் ஊழியர்கள் பசுபதி, காளி ஆகியோர் அதனை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது. இந்நிலையில் அவர்கள் மூவருக்கும் முகம், கைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

தளபதி என்றால் விஜய் நினைவு வரும்... ஸ்டாலின் என்று சொல்லுங்கள்

இந்நிலையில் நேற்று அந்த சிலிண்டர் வெடித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் படுகாயம் அடைந்த மூவரும் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏஜென்சி மேலாளர் வைகுண்டம் மற்றும் ஊழியர் காளி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்...

அடுத்த செய்தி