ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு நடக்கும்... அதிமுக ஆட்சி மலரும்: ஓ.பி.எஸ்.பேட்டி

​​இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Samayam Tamil 24 Dec 2020, 7:20 am
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
Samayam Tamil ops


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி இல்ல பூப்புனித நீராட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சங்கரன்கோவில் நகர அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை பொருளாளர் முருகன் தம்பதியரின் மகள் ஹரினி மற்றும் முருகனின் சகோதரி தெய்வானை சேதுபதி தம்பதியரின் மகள் அனுசியா ஆகியோரின் பூப்புனித நீராட்டு விழா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

புதிய கொரோனா வைரஸ் ஆபத்தானதா? என்ன சொல்கிறது தமிழக சுகாதாரத்துறை!

இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று மீண்டும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி மலரும் எனவும் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கண்டிப்பாக நடைபெறும்” எனவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி