ஆப்நகரம்

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு செருப்பு... பக்தர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட காலணிகளை, பக்தர்கள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 2 Jul 2022, 1:46 pm

ஹைலைட்ஸ்:

  • நெல்லையில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருக்கோவில்
  • நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு செருப்பு வழங்கிய பக்தர்கள்
  • ரூபாய் 12,000 மதிப்பில் பிரத்யேகமாக யானை காந்திமதிக்காக தயாரிக்கப்பட்ட செருப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு செருப்பு
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் யானை காந்திமதிக்கு புதிய செருப்பு வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான நெல்லையில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருக்கோவிலில் காந்திமதி என்ற யானை உள்ளது. 52 வயதாகும் யானை காந்திமதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பப்பட்டு யானையின் உடல் எடை மற்றும் யானையின் உடல் நன்மைக்காக மருத்துவர்களின் பரிந்துரை பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் யானை காந்திமதி கோவில் வளாகத்தை சுற்றி சுமார் ஐந்து கிலோமீட்டர் வரை நடை பயணம் மேற்கொள்ளும். இதன் காரணமாக யானையின் உடல் எடை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


வயது முதிர்வு காரணமாக சாலைகளில் யானை செல்லும் போது மிகவும் கவனத்துடன் அழைத்துச் செல்லும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பக்தர்கள் சார்பில் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு புதிய செருப்பு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 12,000 மதிப்பில் பிரத்யேகமாக யானை காந்திமதிக்காக தயாரிக்கப்பட்ட இந்த செருப்பை கோவில் அதிகாரிகளிடம் பக்தர்கள் சார்பில் ஒப்படைக்கப்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் ஆலோசனையின் படி யானைக்கு செருப்பு அணிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா தொடங்க உள்ள நிலையில் தினமும் சுவாமி ரதவீதியில் உலா வரும்போது யானை காந்திமதி முன் செல்வது வழக்கம். அப்போது மிடுக்கான அலங்காரத்துடன் காலில் வெள்ளி சலங்கை கட்டி யானையை காந்திமதி ரத வீதிகளில் வலம் வரும்.

மாணவர்கள் செம ஹேப்பி; அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!

இந்நிலையில் இந்த ஆண்டு புதிய வரவான செருப்பு அணிந்து புதிய தோற்றத்தில் யானை வலம் வர இருப்பதை காண பக்தர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல கற்கள் குத்தாமல் இருக்க பெற்றோர்கள் செருப்பு வாங்கி கொடுத்து பாதுகாப்பாக நடக்க வைப்பதை போன்று, யானையையும் குழந்தையாக பாவித்து கோவில் நிர்வாகம் மற்றும் நெல்லையப்பர் கோவில் பக்தர்கள் யானை காந்திமதியை பாசமாக பராமரித்து வருவது அனைவரிடத்தும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி