கந்து வட்டி புகாரில் கைது செய்யப்படுவோரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கஞ்சாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கஞ்சாவை கண்டுபிடிக்கும் வகையில் மோப்ப நாய்களுக்கு பிரத்தியேக பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக நெல்லையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி, நெல்லை மாநகர் தென்காசி ஆகிய மாவட்டங்களின் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு சட்டம், ஒழுங்கு, கஞ்சா 2.0, ரவுடிகள் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார்,தென்மண்டல ஐஜி அசரா கார்க், நெல்லை சரக டிஐ ஜி பரவேஷ்குமார் மற்றும் நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், நெல்லை மாநகர காவல் ஆணையாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கந்துவட்டி கஞ்சா போன்றவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், மேலும் அது தொடர்பாக பதியப்பட்டு வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
நெல்லை காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் சிறப்பாக பணி செய்த காவல் துறையினருக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவப் படுத்தப்பட்டது. முன்னதாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கந்து வட்டி தொடர்பாக தமிழகம் முழுதும் 238 புகார்கள் பெறப்பட்டு 171 வழக்குபதிவு செய்து 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்து வட்டி புகார்களில் கைது செய்யப்படுவோரின் சொத்துக்கள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென் மண்டல அளவில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்து முடக்கப் படுவது போல் இதனை பின்பற்றி தமிழகம் முழுதும் இதே நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கஞ்சா பயிரிடும் சம்பவம் முழுக்க தடுக்கப்பட்டுள்ளது. அது போன்ற நிலை தற்போது இல்லை.
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு செருப்பு... பக்தர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக தகவலை தொடர்ந்து ரயில்வே போலீஸ் மூலம் கஞ்சாவை கண்டுபிடிக்கும் வகையில் மோப்ப நாய்களுக்கு சென்னை, கோவை,சேலம் ஆகிய இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார்,தென்மண்டல ஐஜி அசரா கார்க், நெல்லை சரக டிஐ ஜி பரவேஷ்குமார் மற்றும் நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், நெல்லை மாநகர காவல் ஆணையாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கந்துவட்டி கஞ்சா போன்றவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், மேலும் அது தொடர்பாக பதியப்பட்டு வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
நெல்லை காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் சிறப்பாக பணி செய்த காவல் துறையினருக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவப் படுத்தப்பட்டது. முன்னதாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கந்து வட்டி தொடர்பாக தமிழகம் முழுதும் 238 புகார்கள் பெறப்பட்டு 171 வழக்குபதிவு செய்து 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்து வட்டி புகார்களில் கைது செய்யப்படுவோரின் சொத்துக்கள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென் மண்டல அளவில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்து முடக்கப் படுவது போல் இதனை பின்பற்றி தமிழகம் முழுதும் இதே நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கஞ்சா பயிரிடும் சம்பவம் முழுக்க தடுக்கப்பட்டுள்ளது. அது போன்ற நிலை தற்போது இல்லை.
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு செருப்பு... பக்தர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக தகவலை தொடர்ந்து ரயில்வே போலீஸ் மூலம் கஞ்சாவை கண்டுபிடிக்கும் வகையில் மோப்ப நாய்களுக்கு சென்னை, கோவை,சேலம் ஆகிய இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது என தெரிவித்தார்.