ஆப்நகரம்

மறுவாழ்வு மையத்தில் சமத்துவ பொங்கல்: நெல்லை கலெக்டர் அசத்தல்!

திருநெல்வேலி ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 12 Jan 2023, 4:25 pm
தமிழ்நாடு அரசால் நெல்லையில் நடத்தப்படும் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தார். சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய நபர்களுக்கு சுயதொழில் செய்து கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்களிடம் உறுதி தெரிவித்தார்.
Samayam Tamil pongal


தை திருநாள் பொங்கல் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா காலத்தில் ஆதரவற்று மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றி திரிந்தோர் அனைவரையும் பத்திரமாக மீட்டு தனியாக காப்பகம் ஏற்பாடு செய்து அதில் பாதுகாத்து வந்தனர். அதன்படி தமிழக அரசு சார்பில் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் நெல்லை டவுன் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் பண்டிகை சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
பாஜக அரசின் சதித் திட்டத்திற்கு திமுக அரசு துணை போகிறதா? சீமான் குற்றச்சாட்டு!
அப்போது சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தரம்குறித்து அவர்களிடமே கேட்டு அறிந்தார்.

அதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த மன நலம் மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு சுயதொழில் கற்றுக் கொடுக்கும் வகையிலான பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களிடம் உறுதி தெரிவித்தார்.
அவரை தமிழ்நாட்டிலிருந்தே வெளியேற்றுங்கள்: வைகோ காட்டம்!
இதனிடையே நெல்லை மாநகராட்சி மேயர் அந்த மையத்தில் தங்கி உள்ள உள்ள 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சூரிய பகவானுக்கு இலையில் படையல் போடப்பட்டிருந்த மண்ணில் விளைந்த காய்கறிகள் மற்றும் புது பானையில் வைக்கப்பட்ட பொங்கல் ஆகியவை வைத்து வழிபாடும் நடத்தப்பட்டது. வழிபாட்டின் போது மையத்தில் சிகிச்சை பெற்று வரும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மனம் உருகி முருகன் பாடல் பாடிய காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி